எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் காலநிலை அவதானி நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
06.12.2020 3.00 பிற்பகல் மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது.
எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புண்டு.இன்று மாலை அல்லது இரவு அல்லது நாளைக் காலை (07.12.2020) வடக்கு மாகாணத்திற்கு கனமழை கிடைக்க வாய்ப்புண்டு.
மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்